Mai 3, 2024

துயர் பகிர்தல் விஜயலட்சுமி சிவபாதசுந்தரம்

யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சிவபாதசுந்தரம் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா(ராஜா கிறீம் கவுஸ்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசு சிவபாதசுந்தரம்(உரிமையாளர், காமாட்சி களஞ்சியம், ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேசன், காலஞ்சென்ற கமலநாதன், கமலாதேவி, சத்தியமூர்த்தி(லண்டன்), சண்முகானந்தன், சத்தியசீலன், காலஞ்சென்ற குமாரதாஸ், சத்தியலக்‌ஷிமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மீராஜினி(லண்டன்), திபாகினி, சுபாஜினி, பிரசாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோபிகரன்(லண்டன்), சிந்துஜன்(பொறியியலாளர்), கெளசிகன்(பொறியியலாளர்- RDD) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், செல்வராசா மற்றும் இந்திராணி(ஜேர்மனி), மகேந்திரன், ராசேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஸ்னி, கனிகன், சுகானி, சதுன், ஆகர்ஷினி, அக்‌ஷிதன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 1010/30 தலையாழி லேன்,
நாச்சிமர் கோவிலடி,
யாழ்ப்பாணம்தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 வீடு – குடும்பத்தினர்

 வீடு – குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert