April 26, 2024

வருட ஆரம்பத்தில் மன்னார் – மடுவில் சோகம்

மன்னார் – மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மன்னார் – மதவாச்சி வீதியுடாக முச்சக்கரவண்டி சென்றுகொண்டிருந்த சமயத்தில் மடு பகுதியினை அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டியின் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியினை முந்திச்செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போதே குறித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த  சிங்கள  அரசுக்கான போக்குவரத்து காவல்தறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.