Mai 9, 2024

துயர் பகிர்தல் கவிஞர் வண்ணை தெய்வம்

ஈழத் தமிழரின் ஓர் பெரும் தமிழ் அறிவுச் சொத்தை ஆண்டவன் அழைத்துக் கொண்டான்.
தாயகம் தொட்டு புலம் வரையில் கவிதைகள்,சிறுகதைகள், நாடகங்கள்,என நீண்ட எழுத்துக்களுடன் பல நூல்களாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் எம் சமூகத்திற்கு வழங்கிய பெருமை இவருக்குண்டு.
மேலும் உலகெங்கும் வாழும் எம் கலைஞர்களின் தொகுப்பாக காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்து கலைஞர்கள் என்னும் அரிய நூல் இவரின் கலைத் தாகத்திற்கும் கலைஞர்கள் மேல் இவர் கொண்ட அன்பிற்கும் ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
அரங்க நிகழ்வுகளாக கவியரங்கு, விவாத அரங்கு ,என பல் நிகழ்வுகளுடன் வலம் வந்தவர்
TRT, ABC,IBC ,T,T,N என புலத்தின் அத்தனை வானொலிகள் ,தொலைக்காட்சி களுடனும் கலைப்பணியாற்றியவர். அமரர் அவர்களின் தாயகம் நோக்கிய எழுத்துப் பணிக்காக பிரானஸ் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினால் ஈழத்தமிழ் விழி எனும் சிறப்பு பெயர் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் சிறப்பு.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆத்ம சாந்திக்கு பிராத்திக்கின்றோம்….
அமரர் புகழ் வாழ்க….