April 26, 2024

சுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் – வவுனியாவில் போராட்டம்!!

vavuniya protestவவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக
இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் போராட்டம் நடைபெற்றிருந்தது.
  • சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம்.
  • எமக்கான நீதியை நாம் பெற ஏதுவாக இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்து.
  • எங்கள் உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் வழங்க வேண்டும்
  • சுமந்திரன் , சீறீதரனை எதிர்க்கிறோம்.
  • இராணுவ கெடுபிடிகளை உடன் நிறுத்து.
  • இலங்கையில் போர்க் குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள்.
  • எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்.
  • வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கே?
  • சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்.
போன்ற கோரிக்கைகளை சுலோக அட்டைகளைத் தாக்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.