März 29, 2024

மட்டக்களப்பில் கூட்டமைப்பிற்கு நாலாம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது அமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பேத்தாழையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,‘இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு தமிழர்களின் உரிமை தொடர்பாக பிரச்சினை எழுந்ததன் நிமிர்த்தம் ஆரம்பத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியான போராட்டத்தினை நடாத்தினார்கள். அதில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாக இளைஞர்கள் கொத்தளித்தார்கள்.
இதன்காரணமாக ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மௌனித்து போனது. இதனால் எமது தமிழ் சமூகம் ஒரு நிர்க்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியல் என்பது ஒரு பலமான ஆயுதம் அந்த அரசியல் ஆயுதத்தினை இளைஞர்கள் கையில் ஏந்த வேண்டிய காலம் இது. ஜனநாயக ரீதியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் என்பதை மிகவும் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று என்னுள் ஏற்பட்ட நம்பிக்கையின் பலனாக நான் அரசியலில் உள்வாங்கும் நோக்கில் களமிறங்கியுள்ளேன்.’ – என்றார்