Mai 20, 2024

பௌத்தமதத்தின் தர்மம் புரியாத சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன் உங்களுக்கு உங்கள் இனமே பாடம் புகட்டும்!

சரத் வீரசேகர, விமல் வீரவன்ச ,உதய கம்மன் இந்த மூவரும் சிங்கள மக்களுக்கே துரோகிகளாக இன்று நிற்கின்றனர் நாடு சீரழிந்து பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கின்ற இந்த வேளையில் பூர்வீக குடிக்கலாம் தமிழர்களை வசைப்பாடும் இந்த மூன்று அரசியல்வாதிகளும் தமிழருக்கான துரோக அரசியலை நடத்துவதன் மூலம் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைக்கின்றார்கள்


இன்று சிங்கள மக்கள் வெளிப்படைந்து நிற்கின்ற இந்த காலப்பகுதியில் தவளை தன் வாயால் கெடும் என்பது போல இவர்களின் இனத்துவேசங்கள் என்ற பாணி இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் கை கொடுக்கப் போவதில்லை ,தமிழர்களை அண்டி வாழாத நிலையில் இலங்கை அரசின் பொருளாதார நிலைப்பாடும் சீரடைய போவதில்லை ,

உலக நாடுகளிடம் பொய் உரைத்து இதுவரை அரசியல் நடத்திய அரசுகளின் நிலை யும் அனைவரும் அறிந்ததே அந்த வகையில் எத்தனை வசை பாடினாலும் தமிழர்கள் தலைவன் பாதையில் இலட்சியப்பாதை தொடரும் அது இன்றய காலத்துக்கேற்றால் போல் முன் எடுக்கப்படும் என்பதே நிஜம் ,

பொய்கள் நிலைத்திடுமா ?
பேடிகள் உங்கள் பொய்களை உலகறிந்து-அவர்கள்
கண்விழித்து நிற்கின்றார்கள் -எங்கள்
தமிழினம்இன்று உலகில் உல்லாம் கரம்கோத்து நிற்கின்றது
பொய்யுரைப்பும் எம் பூமி பிடிப்பும் என்தனைகாலம் ?
பொறுத்திரு புலரும் தமிழர் வாழ்கை !

ஈழத்தமிழன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert