Mai 20, 2024

தமிழரை அடிமையாக்க நினைக்கும் பௌத்த துறவிகள் சிலர்!

சென்ற 22.08.2023 அன்று மட்டக்களப்பு மைலத்தமடு மாதவணை சென்றிருந்தவேளை அங்கு வசித்து வரும் பௌத்த துறவி தலைமையிலான சட்ட விரோத கும்பலினால் பொதுநலச்செயல்பாட்டாளர் திரு சி.சிவலோகநாதன் உட்பட பல்சமய குருமார்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்
ஊடகவியலாளர்கள்
பண்ணையாளர்கள் என சுமார் இருபது பேர் ஆறு மணிநேரம் சாப்பாடு தண்ணீர் எதுவும் இல்லாமல் தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் அலுவலகத்தில் 01.09.2023 அன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இச் செயற்பாடானது எனது அடிப்படை உரிமையை மீறிய செயலாகும்.
இதனடிப்படையில் கரடியநாறு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மகாவளித் திணைக்கள மட்டக்களப்பு பொறுப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert