Mai 1, 2024

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக வழக்கு!

சங்கானை தொடக்கம் பொன்னாலை வரையான வீதி, மாவடி தொடக்கம் மூளாய் வரையான வீதி போன்றவற்றை திருத்தாமல் மக்களின் ஆயுளைக் குறைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு வலி.மேற்கு பிரதேச சுகாதாரக் குழுக் கூட்டத்தில் சபை உறுப்பினர் ந.பொன்ராசா கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மேற்படி கூட்டம் சபையின் மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது.
கூட்டத்தில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், வலி.மேற்கு பிரதேச செயகல உத்தியோகத்தர்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert