April 28, 2024

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

சிறிய தினை , பெரிய வெங்காயம் , உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சி ஆகிய ஆகிய நான்கு பயிர் செய்கைகளை விவசாயிகள் கைவிட்டமையால் , அவை பூச்சிய நிலையை அடைந்துள்ளது. 

குறிப்பாக சங்கானை பிரதேச செயலக பிரிவில் , அராலி பகுதியில் பெரிய வெங்காய பயிர் செய்கையும்,  கோப்பாய் , உடுவில் பிரதேச செயலக பிரிவில் , உருளைக்கிழங்கு பயிர் செய்கையும் மற்றும் தினை , இஞ்சி ஆகிய பயிர் செய்கையும் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் கால நிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் செய்கைகளை கைவிட்டு உள்ளமையால் , அவை பூச்சிய நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert