Mai 3, 2024

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சரவணமுத்து

திரு கணபதிப்பிள்ளை சரவணமுத்து

தோற்றம்: 31 மார்ச் 1953 – மறைவு: 15 செப்டம்பர் 2020

யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சரவணமுத்து அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவஞானவதி, கணேசமூர்த்தி, கனகசபாபதி, இரத்தினசபாபதி, சிவலோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசம்மா, துரைராசா, செல்வராணி, சிவரஞ்சினி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துரேஷ், துஸ்யந்தன், காலஞ்சென்ற துவாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகதர்சினி, கீதாஞ்சலி, இராகுலன், அனுசா, ரேணுகா, அகிலன், விசாகினி, விமோசனா ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

அர்ச்சனா, சண்பிகா, அகல்யா, அனுசன், அபிநயா, அனுசூயா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மிருசுவில் பெரியானோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
கனகசபாபதி(ஜெயம்) – சகோதரர் Mobile : +94 77 656 9874   
சிவலோகநாயகி – சகோதரர் Phone : +41 56 610 4867
கணேசமூர்த்தி – சகோதரர் Phone : +49 202 479 0029
இரத்தினசபாபதி – சகோதரர் Mobile : +94 77 058 3625   
சண்பிகா Mobile : +94 76 494 4849