Mai 3, 2024

வெலிக்கடை சிறை்சாலை கைதிகளை சந்தித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி!

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே நேற்று, வெலிக்கடை சிறைச்சாலையின் ஜி-வார்டில் ஆய்வு நடத்தியுள்ளார்.

ஜி-வார்டில் உள்ள கைதிகள் 76-90 வயதுக்குட்பட்டவர்கள். இதில் பெரும்பாலான கைதிகள் சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை செயலிழப்பு, குடலிறக்கம், பிற வாழ்நாள் வியாதிகள் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட கைதிகள் மீது அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தேவையான இடங்களில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு கைதிகளை உடனடியாக சிறை மருத்துவமனைக்கு மாற்றுமாறு அவர் மேலும் அறிவுறுத்தினார்.

சிறைச்சாலையின் மேலும் சில பகுதிகளையும் பார்வையிட்டு, கைதிகளுடன் அவர் கலந்துரையாடினார்.