Mai 6, 2024

சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம்?

அரச காணிகளை ஆவணங்கள் இன்றி அபிவிருத்தி செய்து வைத்திருப்போர் 30ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதன் மூலம் எல்லையில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கு அங்கீகாரம் வழங்க அரசு முற்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள் தமிழ் மக்களது காணிகளை ஆக்கரமித்துள்ள நிலையில் உறுதி பத்திரங்கள் இன்றி சட்ட சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிற்கு அங்கீகாரத்தை வழங்க தற்போது அரசு வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.