Mai 7, 2024

இலங்கையில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரும் கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 177 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.