Mai 2, 2024

வரலாற்றை திரிபுபடுத்தும் கும்பல்?

குட்டிமணி, தங்கத்துரை போன்ற டெலோ அமைப்பின் தலைவர்கள் படகு மூலம் தமிழ்நாடு தப்பிச் செல்ல ஆயத்தமாக இருந்தபோது 1981 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தபோதும்  உண்மையில் அவர்களை கைது செய்த பொலிஸாரிற்கு அவர்கள் யார் என்பது பற்றி தெரிந்திருக்கவில்லை. சாதாரண கடத்தல் காரர்கள் என்றே கருதி அவர்களை கைது செய்து காவலில் வைத்திருந்தனர்.

முன்னதாக குட்டிமணி தனது கைத்துப்பாக்கியினால் தனது தலையில் சுடமுயன்றபோது தங்கத்துரை அதனை தட்டிவிட்டுள்ளார்.ஆனாலும் சிறிய சூட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.அதற்குச்சிகிச்சைக்காக மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சமயம் ஒரு தமிழ்ப்பொலிஸ்காரரால் குட்டிமணி அடையாளம் காணப்பட்டுள்ளார்.