Mai 2, 2024

தென்னிலங்கையில் பதற்றம்!

களுத்துறை மாவட்டத்தின் அட்டலுகம – மாராவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 04 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப்பை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.