Mai 6, 2024

மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல்

 
முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வடமாகாண ஆளுநரை மாஞ்சோலை வைத்தியசாலை அபிவிருத்தி குழு, செல்வம் அடைக்கலநாதன் சகிதம் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பில் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை செவிமடுத்த ஆளுநர், பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் உறுதியளித்தார்.