Mai 3, 2024

யாழில் பெண் ஒருவர் புலனாய்வாளர்களால் கைது..!!

யாழில் பெண் ஒருவர் புலனாய்வாளர்களால் கைது..!!

யாழில் ஹெரோயின் போதை பொருளை கடத்திச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதும் பொலிஸாரினால் கண்டறியப்படுள்ளது.

யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்தே குறித்த பெண் நேற்று புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பூம்புகார் பகுதியில் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டர் சைக்கிளில் ஒன்றில் வைத்தியசாலை ஊழியர்கள் போன்று மருத்துவ குறியீட்டு ஸ்ரிக்கர் ஒட்டியவாறு பயணித்த பெண்ணை மறித்து சோதனையிட்ட போதே போதை பொருளை அவரது உடமையில் இருந்து மீட்டனர்.

அதனை அடுத்து அப்பெண்ணை கைது செய்த புலனாய்வாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த போது போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபருடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை தொடர்ந்து பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.