Mai 3, 2024

கௌரீஸ்வரன் அவகளின் கண்ணீர் அஞ்சலி ,டோட்மூண்ட் மக்களும், வர்த்தகர்களும் பொங்கல்விழாக் குழுவினர்களும்

கண்ணீர் அஞ்சலி அமரர் விஜயராசா கௌரீஸ்வரன் அவர்கள்
தோற்றம்22.01.1957 மறைவு10.06.2020

கௌரீஸ்வரன் அவர்கள்
இறைவன் அடி சேர்ந்த செய்தி
எமைக் கவலையில்அழ்த்தியது

தோழனாய் ஆயலத் தொண்டனாய்
தொழுது தொழுது சிவனை
துதிபாடிய பக்தன் நீர்
போனது தான் எங்கே .?

மனைவியை பிள்ளைகளை
மருமகன் பேரப்பிள்ளைகளை
இங்கே விட்டு விட்டு எங்கே தான் போனீரோ
இறைவனடி காண்பதர்க்காய்..?

உறவுகளும் உற்றாரும்
உள்ளன்பு நண்பர்களும்
உரையாடக் காத்து நிற்க்க
உறக்கத்தில் ஆழ்வது ஏன்
உயிரற்ற உடலாக ?

பொதுப் பணிகள் நன்றாக
புகழ் தேடா ஒருவனாய்
தனிச் சேவை செய்பவனே
உமை எப்போது நாம் காண்போம்
இவ்வுலகில்..?

உங்களை பிரிந்து வாடும்
டோட்மூண்ட் மக்களும்
வர்த்தகர்களும்
பொங்கல்விழாக் குழுவினர்களும்