Mai 3, 2024

கண்ணீர் அஞ்சலி அமரர் விஜயராசா கௌரீஸ்வரன்

கண்ணீர் அஞ்சலி அமரர் விஜயராசா கௌரீஸ்வரன் அவர்கள் தோற்றம் 22 மறைவு 10 01 06 1957 2020 அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின் பக்தனாய் பரிபாலன சபை உறுப்பினராய் தொண்டனாய் அனைவரினதும் தோழனாய் ஆலய வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்தவனே ! திருப்பணி வேலைகளை உன் முழப்பணியாய் கைக்கொண்டு முழுநேரச் சேவகனாய் முகம் மலர்ந்து பணி செய்தவனே ! ஆன்மீக வழியில் நின்று அருட்பாக்கள் ஓதி எம்மை இறைவன் திருவடியை எண்ணி மகிழச் செய்தவன் நீ ! ஆகம விதிகளின் படி ஆலயங்கள் நடப்பதற்கு ஒழுங்கு விதிகளைக் கூறி ஒவ்வொருவராய் பயிற்றுவித்தாய் பஞ்சாங்க முறை மாற்ற பல காலம் முயற்சி செய்தாய் ! காசாளர் பதவி பெற்று கணக்கு முறை செயற்பாட்டை கடைப்பிடிக்க வழியமைத்தாய் ! எறும்பு உணவு சேர்த்ததுபோல் ஆலயப் பொருட்களை எந் நாளும் பாதுகாத்தாய் ! ஆலய நிர்வாகச் செயற்பாட்டை நிலை நிறுத்தி வழி நடத்த நீ செய்த சேவையெல்லாம் நினைத்தேங்க வைக்குதையா ! நோய் உற்ற வேளையிலும் உன் நோக்கமெல்லாம் கோயிலிலே , நோய் மாறி வருவாயென்று உனை நோக்கிக் காத்திருந்தோம் – ஆலயத்தை துவாரபாலகனாய் தாங்கி நின்ற தூண் ஒன்று சாய்ந்தது என அறிந்து துவண்டு தவிக்கின்றோம் . வெளியில் செய்த சேவையினை தன்னருகில் செய்வதற்கு எண்ணி ஈசன் அழைத்துவிட்டான் இரு கரம் கூப்பி வணங்குகிறோம் . ஆலய குருமார் , ஆலய நிர்வாக சபை , தொண்டர் குழு . அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்