Mai 6, 2024

யாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்.!! அதிகாரிகளின் கவனத்திற்கு..!

யாழ்பாண நகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக சுற்றித்திரியும் பிறநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவர் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்காக இந்தச் செய்தியை தருகின்றோம்.
தற்பொழுது மனநோயாளியாய் அலைந்து திரிகின்றார். எனவே அவரை உரிய நாட்டுக்கு சேர்ப்பிப்பதற்க்கு அனைவரும் கருணையுள்ளத்துடன் பாடுபடுவோம். இதன் மூலம் எமது எம் கருனையுள்ளத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு காட்டுவோம்.
இவரை நேரில் காணவேண்டுமெனின் நிகேதபவன் உணவகம், மற்றும் பிறிண்ஸ் உணவகம் மற்றும் ஜெயம் கூல்பார் இவற்றிக்கு அருகாமையில் காலை 8.00 மணிக்கும் 9.மணிக்கும் இடையில் கூடுதலாக அமர்ந்திருப்பார். சுற்றுலா வந்த இடத்தில் மனநோயாளியாகி திக்கற்று நிர்க்கதியாகி நிற்கும் இந்த வெள்ளைக்கார மனிதருக்கு நல்வழி காட்டி அவரது சொந்த நாட்டில் சேர்ப்பிக்க எமது அதிகாரிகள் அரசியல்வாதிகள் உடன் முன்வர வேண்டும்.. செய்வீர்களா..?