Mai 9, 2024

மன உளைச்சலுக்கு ஆளான பிக்பாஸ் நடிகை! காரணம் என்ன ??

சினிமா வட்டாரத்தில் Me Too புகார் பற்றி பேசப்பட்டது பலரும் அறிந்ததே. நடிகைகள் சிலர் இதில் தொழில் நிமித்தமாக பட வாய்ப்புகளை அணுகையில் படுக்கை சிலர் தங்களுடன் பகிர்ந்துகொள்ள கூறியதாக புகார் அளித்தனர்.

இது அவ்வப்போது தொடர் கதையாகி வருவதை நாம் காணமுடிகிறது. இவ்விசயத்தில் தைரியமாக சாலையில் இறங்கி போராடி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் தற்போது தெலுங்கு வட்டாரத்தை சேர்ந்த நடிகை மாதவி லதா பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மீது அவதூறு நோட்டீஸ் புகார் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராகேஷ் மாதவி லதா பட வாய்ப்புகளுக்காக தன்னிடம் தவறாக நடந்து கொண்டது போல கூறியுள்ளதாகவும், இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு ராகேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் மீது போலிஸ் மீது புகார் அளிப்பேன் என்றும், சம்மந்தப்பட்ட சானல் மீதும் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

மாதவி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 கலந்து கொண்டவர். தமிழில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஐஸ்வர்யாவுக்கு மகளாக நடித்திருந்தார்.