Mai 8, 2024

துயர் பகிர்தல் திரு ரொஷான்

திரு ரொஷான் அவர்கள் 01.06.2020 அன்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார். அமரர் ரொஷான் அவர்கள் எமது அமைப்பினரால் வருடாந்தம் நடாத்தப்படும் உறவுகளின் சங்கமம் நிகழ்வுக்கு அனுசரணையாளராக செயற்படுபவர். அன்னாரின் இழப்பினால் துயரடைந்துள்ள அவர்களது குடும்பத்தினரோடு சேர்ந்து உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினராகிய நாமும் ஆழ்ந்த துயரில் பங்கெடுத்துக் கொள்கிறறோம்.
அமரர் ரொஷானை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
நன்றி
உறவுகளுக்கு கரம் கொடுப்போம்
ஸ்ருற்காட் ஜேர்மனி