April 27, 2024

அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட கைதுகள் நிறுத்தப்படவேண்டும்

அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட கைதுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாலை 2:30 மணியளவில் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

இதன் பொழுது திட்டமிட்ட கைதுகளை உடனடியாக நிறுத்து ,வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களமே அரசின் கைக்கூலியா,கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும், திருகோணமலை எங்கள் சொத்து ,அம்பாறை எங்கள் சொத்து , மட்டக்களப்பு எங்கள் சொத்து, யாழ்ப்பாணம் எங்கள் சொத்து, கிளிநொச்சி எங்கள் சொத்து, வவுனியா எங்கள் சொத்து, முல்லைத்தீவு எங்கள் சொத்து, மன்னார் எங்கள் சொத்து,வீரம் விளைந்த தேசம் காக்கிகளின் சலசலப்புக்கு அஞ்சாது, இராணுவமே வெளியேறு,மண்துறந்த புத்தருக்கா மண்மீது ஆசையா என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert