April 25, 2024

யாருக்கும் வாக்களிக்காது – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்டிருந்தால் வாக்களிப்பது குறித்து பரிசீலித்திருக்கலாம். தற்போது நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

செவ்வாய்கிழமைக்குள் அது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார். மற்றவர்கள் அனைவரும் வெற்றி பெறுபவருக்கு ஆதரவளிப்பதைத் தவிர்ப்பார்கள். நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், எங்களால் முவாக்களிக்க டியாது.  நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யவில்லை என்று சிறிசேன மேலும் கூறினார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert