Mai 4, 2024

கட்டைப்பஞ்சாயத்துக்கு தர்மஅடி!

 யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை காவல்துறையின் தமிழ் நபரொருவரது வீடு புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியதில்  குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு  காவல் நிலையத்தில் கடமையாற்றும்,காவல்துறையின் தமிழ் நபரொருவரது  கோண்டாவில் வீட்டினுள்  ஞாயிற்றுக்கிழமை மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

குறித்த காவல்துறையின் தமிழ் நபரொருவரது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரண சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன் பின்னணியில் காவல்துறையின் தமிழ் நபரொருவரது வீட்டினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert