Mai 3, 2024

மொட்டிலிருந்து எந்நேரமும் பிரிய கை தயார்!

மொட்டுத்தரப்பிலிருந்து பிளவு உச்சமடைந்துள்ள நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

அரசாங்க பங்காளிக் கட்சிகளின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளதுடன், இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert