Mai 3, 2024

இரண்டு பாரிய குண்டுகளுடன் 6 பேர் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாரிய இரண்டு குண்டுகளை இரும்பிற்காகக் கடத்தி செல்ல முற்பட்ட 6 பேரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாரிய இரண்டு குண்டுகளை இரும்பிற்காகக் கடத்தி செல்ல முற்பட்ட 6 பேரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட இரண்டு பாரிய வெடிகுண்டு இருந்துள்ளது.

அங்கு வேலி அமைப்பதற்காக நேற்றையதினம் சென்ற நபர் வெடிகுண்டினை அடையாளம் கண்டு அதனை இரும்பிற்கு விற்பதற்காக எடுத்துச் செல்ல முற்பட்ட போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 6 பேரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோ கிராம் எடைகொண்ட குறித்த குண்டுகள் இரும்பிற்காகக் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்கள்.