Mai 18, 2024

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்நிற்பவர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சரத் பொன்சேகா புகழாரம்

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அன்றுதொட்டு சுமந்திரன் இருந்து வருவதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா நாடாளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார். இதன்காரணமாக சுமந்திரனுக்கு மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இந்த நாட்டை பிரிப்பதற்கு எதிராக செயற்படுபவரென்றும் அவருக்கு மீண்டும் விசேட அதிரடிப்படை பாதுக்காப்பு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரே பொறுப்புக் கூறவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.