Mai 9, 2024

போதைப்பொருள் வாங்க பணமில்லாததால் தனது கிட்னியை விற்ற இலங்கை இளைஞன்!

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் பாவித்தவர், பணம் முடிந்த பின்னர் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதுதவிர, வியாபாரிகளிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான உடை, துணிகள் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. திருடப்படும் ஆடைகளை அவர் புறக்கோட்டை வர்த்தகர்களிடம் விற்பனை செய்வது தெரிய வந்தது.

சுமார் 1.5 மில்லியன் ரூபா பணத்தை ஆடைகள் திருடி அவர் ஈட்டி, போதைப்பொருள் பாவனைக்காக செலவிட்டுள்ளார்.

பேலியகொட, துட்டகெமுனு மாவத்தையை சேர்ந்த 36 வயதானவரே கைதாகினார்.