Mai 9, 2024

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,330பேர் பாதிப்பு- 205பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 205பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 16இலட்சத்து 29ஆயிரத்து 657பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 58ஆயிரத்து 448பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 417பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.