மொனராகலையில் 45 பிக்குகளுக்கு கொரோனா….
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/07/01c160ab-6231-40dd-9cdf-4ad400f82dc3-45.jpg)
மொனராகலை மாவட்டத்தில் 45 பிக்குகள் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
படல்கும்புற, கல்பொட பிரிவெனா விகாரையை சேர்ந்த 45 பிக்குகள் உட்பட 72 பேர் இவ்வாறு தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த விகாரைக்கு கந்தக்காடு முகாமில் பணிபுரியும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் வழிபட சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த 72 பேரும் அந்த விகாரையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.