Mai 3, 2024

உக்கிரமடையும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்கள்: 25 போராளிகள் பலி!!

கடந்த 24 மணித்தியாலங்களில் 12 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் இன்று கொல்லப்பட்டனர் என லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. 

இதன் மூலம் தெற்கு லெபனானில் மோதல்கள் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா போராளிகளின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

120km (75-மைல்) எல்லையில் உள்ள பல இஸ்ரேலிய நிலைகளை தாக்கி வருவதாகவும் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert