Mai 9, 2024

13 நாளாக பிரான்சில்தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் .

12/09/2023 காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

இன்று பிரான்சில் வித்தனைம் முதல்வருடனான சந்திப்பை முடித்து முலூஸ் மாநகரை நோக்கி பயணிக்கின்றது. நேற்ற தினம் பல அரசியல் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது,ஏர்செய்ன் மாநகர சபையினர் அறவழிப்போராளிகளை மகிழ்ச்சியாக வரவேற்று காலை உணவு கொடுத்து எமது அறவழிப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து,எமது அறவழிப் போராட்டத்தின் இலக்கு பற்றி மாநகர முதல்வருடனான கலந்துரையாடல் நடைபெற்றது, இதில் சிறிலங்க சிங்களபெளத்தஇனவாத அரசால் திட்டமிட்டு நடந்தப் பட்ட தமிழினப் படுகொலைகள் பற்றியும். தற்போது தமிழீழத்தில் திட்டமிட்டு நடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு பற்றியும் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப் பட்டது. தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது,இதனை தொடர்ந்து பேன்பெட் சோலட்டாட் மாநகர துணை முதல்வர்களுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு பிரான்சு அரசு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டுமென கேட்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையிலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமானது. எனவே பல்லின வாழ் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்கள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.  

அறவழி ஈருருளிப்பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை நேற்று 11/09/2023 கொல்மார் , நகரசபைகளில் முதல்வர்கள், மேற்சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்றது மட்டுமல்லாமல் பன்னெடுந்தூரம் சுமந்து வந்த நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி தந்து ஊக்குவித்தனர். நகரசபை முதல்வர்கள் தம் முகநூல் பக்கங்களிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் சார்ந்த பதிவுகளை பதிவுசெய்து தம் ஆதரவினைத் தெரிவித்தனர்.

 எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். எதிர் வரும் திங்கட் கிழமை 18/09/2023 திகதி அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்”

– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்”

«தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்»

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert