April 27, 2024

வவுனியாவில் சாந்தனின் உடலுக்கு பெருந்திரளான மக்கள் கண்ணீர் சிந்தி அஞ்சலி

வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்கள் கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் இருந்து சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடாக , கொடிகாமம் பகுதியை அடைந்து , அங்கிருந்து நெல்லியடி ஊடாக வல்வெட்டித்துறை தீருவில் மைதானத்தை மாலை 2 மணியளவில் அடைந்து , அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதனை தொடர்ந்து நாளைய தினம் திங்கட்கிழமை காலை அவரது வீட்டில் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாட்டங்களை தவிர்த்து , தமிழ் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert