Mai 20, 2024

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கறித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 2023.09.22 இன்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணி பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி.B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் இவ் நடை பேரணியில் பொது சுகாதார பரிசோதகர்கள்
அருட்தநந்தையர்,அருட்சகோதரிகள், ,கிராம மட்டத்திலான மக்கள், இளைஞர்கள். யுவதிகள் சிறுவர்கள், அரச ஊழியர்கள் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள மக்கள் அனைவரும் இவ் நடை பேரணியில் ஒன்றிணைந்து
கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது திருகோணமலை பிரதான கடற்கரை முன்பாக ஆரம்பித்து கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நிறைவடைந்தது . அத்துடன் ஆளுநரின் உதவி செயலாளர் திரு.A.G. தெய்வேந்திரன் அவர்களிடம் விழிப்புணர்வு நினைவு பத்திரத்தினை பணிப்பாளர் அவர்களினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert