Mai 3, 2024

16 ஈழ ஏதிலிகள்;16 தமிழக மீனவர் கைது?

16 ஈழ ஏதிலிகள் தமிழகம் சென்றுள்ள நிலையில் 16 தமிழக மீனவர்களை கைது செயதுள்ளது இலங்கை கடற்படை.

இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 16 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு படகில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கிளிநொச்சி இரணைதீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட அதே நேரம் மேலும் ஒரு படகு நெடுந்தீவுப்  பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert