துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி சரவணபவா
திரு சின்னத்தம்பி சரவணபவா
தோற்றம்: 19 ஜூன் 1953 – மறைவு: 16 டிசம்பர் 2020
யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரவணபவா அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீரங்கம் சின்னத்தம்பி(ஆசிரியர்), சிவநேசம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கந்தசாமி ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசியா, ஜனாத்தினி, சர்மிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லீதிசன், டிவியேஸ் ஆகியோரின் அன்பு பேரனும்,
ஞானதேவி (கனடா), விவேகானந்தன்(இலங்கை), விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்