Mai 11, 2024

கொழும்பிலிருந்து செல்வோருக்கு சோதனை?

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து தங்களது ஊர்களுக்கு செல்லும் மக்களை இலக்குவைத்து விரைவான ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணிக்கும் பொதுமக்களுக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.