Juli 27, 2024

மகிந்தவும் தொல்பொருளிற்காக குழு நியமித்தார்?

20 உறுப்பினர்கள் கொண்ட தொல்பொருள் ஆலோசனை குழு ஒன்று  இலங்கைப்பிரதமாரால் நேற்று புதன்கிழமை  நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி கோத்தபாய கிழக்கிற்கென தனிச்சிங்களவர்களை கொண்டு விசேட செயலணியொன்றை உருவாக்கியுள்ள நிலையில் தற்போது மகிந்தவின் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.