சமூக குற்றங்களை தடுக்க எமக்கு வாக்களியுங்கள் – அநுரகுமார திசாநாயக்க
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/07/sri-lanka-696x398-38.jpg)
![](http://ceylonmirror.net/wp-content/uploads/2020/07/unnamed-compressor.jpg)
சமூக குற்றங்களை தடுக்க வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுக்க பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
நாட்டில் ஒழுக்கமும் சட்டமும் பேணப்படாத காரணத்தினால் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள அதேவேளை 60 இலட்சம் குடும்பங்கள் உள்ள இலங்கையில் ஒரு குடும்பம் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமையினால் வீழ்ச்சியடைந்துள்ள ஒரு சமூகமே உள்ளதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இந்நிலை மாற்றப்பட வேண்டுமாயின் தமக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.