பெல்ஜியத்தில் ஈழமும் தமிழரும் என்ற புத்தகம் வெளியீடு

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14/5/2023)  அன்று  பெல்சியம் கிளையின் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்வேர்ப்பன் மாநிலத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. முதன்மை நிகழ்வாக இனவழிப்பு திருவுருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மற்றும் மலர் வணக்கத்துடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈழமும் தமிழரும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது .புத்தகத்தின் உள்ளடக்கமானது,தாயக வரலாறு சார்ந்த விடயமாக இளையோரின் கவனத்துக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு பொக்கிசமான புத்தகமாக அமைந்துள்ளது .புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றி இளையோர் அமைப்பு இணைப்பாளர் உரை நிகழ்த்தினார்.மேலும் புத்கங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் 4 மணியளவில்  யாவும் இனிதே நிறைவு பெற்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert