April 27, 2024

பிரான்ஸில் கைதுசெய்யப்பட்ட மனித கடத்தல்காரர்கள்

மனித கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரான்ஸ் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மடக்கி பிடித்த பொலிஸார் 40 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை துறைமுக நகருக்கு அருகே மடக்கி பிடித்த பிறகு, மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை பிரான்ஸ் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பிரான்ஸின் Boulogne-sur-Mer வடக்கே Wimereux க்கு அருகே உள்ள D237 சாலையில் இன்று அதிகாலை 3.35 மணியளவில் 40 புலம்பெயர்ந்தவர்களுடன் வாகனம் சென்று கொண்டு இருந்த போது பொலிஸார் அதை மடக்கி பிடித்தனர். அத்துடன் வாகன சாரதியை கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
அத்துடன் பிரான்ஸின் கடற்கரை நகரமான Wimereux-ல் மனித கடத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Wimereux நகரை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து நீண்ட காலமாக மனித கடத்தல்காரர்கள் பிரித்தானியாவுக்கு படகுகளை செலுத்துகின்றனர். கடந்த சனிக்கிழமை ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட 5 நபர்கள் Wimereux கடற்கரையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட 5 பேரும் குளிர் நீரில் தாழ்வெப்பநிலை(hypothermia) பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert