Mai 2, 2024

அகதிகளை துரத்தும் கடற்படை,இராணுவம்!

இலங்கையில் இருந்து தற்போதைய பொருளாதார நெருக்கடி மத்தியில் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வோரை தடுப்பதற்காக மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலமை மற்றும் வருமானம் இன்மை காரணமாக பலரும் தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர். இதன் காரணமாக அரசிற்கு இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் அதிகமாக காணப்படும் என்பதனால் தமிழகத்திற்கு தப்பியோடுவோரை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்கு பின்பு இலங்கையில் இருந்து 39 பேர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர.; அதனை தடுக்க கடற்படை மற்றும் இரணுவத்தினர் மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தமது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert