April 25, 2024

யாழில் விபத்து!! விளையாட்டுக் கழக வீரர் பரிதாபச் சாவு

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

வடமராட்சி மந்திகையில்  இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் கண்ணன் காந்தன் (வயது -22) என்ற இளம் வீரர் உயிரிழந்தார்

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.