Mai 4, 2024

சீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சீனாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சீனாவில் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தது என்று தான் கூறவேண்டும். அதாவது உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் காலநிலை மாற்றம் காரணமாக மொத்தமாக பருவங்கள் மாறி, மழை, புயல், வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. அதேபோல் ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் வெப்பநிலை காரணமாக உருகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சீனாவிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. சீன ஊடகங்கள் தெரிவித்த தகவலின்படி, 1000 வருடத்தில் இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.