April 26, 2024

வீதியில் சடலமாகக் கிடந்த முதியவர்! யாழில் சம்பவம்!!

யாழ் நகரில் மத்திய பேருந்த நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும், முதியவர் இதய வருத்தம் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண காவல்துறையினரால் முதியவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் மரண விசாரணை  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.