பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு

பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இயக்கச்சி  55 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்றது அரச சேவையில் உள்வாங்கப்பட்ட 176 பட்டதாரிகள் கடந்த மூன்று வாரங்களாக  அந்த முகாமிலேயே தங்கியிருந்து குறித்த பயிற்சி நெறியினை பூர்த்தி செய்திருக்கிறார்கள்

குறித்த பயிற்சி நிறைவு நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்  பண்டார ராணுவத்தின் 55 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்