April 26, 2024

பிரபல டிவி சீரியல் துணை நடிகையை திருமணம் செய்த 31 வயது இளைஞன் மீது புகார்!

பிரபல டிவி சீரியல் துணை நடிகையை திருமணம் செய்த 31 வயது இளைஞன் மீது புகார்!

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர் டிவி சீரியலில் துணை நடிகை நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர், சேலம் மாவட்டம், இடைப்பாடி காவல்நிலையத்தில், நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், இடைப்பாடி, வெள்ளாண்டிவலசைச் சேர்ந்த, சவுந்தரராஜன்(31). எம்.பி.ஏ., முடித்த இவர், கிள்ளியூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவிலில் திருமணம் செய்தார்.

வெவ்வேறு இனத்தவர் என்பதால், வேறு திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதனால், என்னுடன் வாழ மறுக்கிறார். அவர் மீதும், அவரது தாய் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தின்போது எடுத்த புகைப்படம், நெருக்கமாக இருக்கும் வீடியோ பதிவுகளை, பொலிசாரிடம் ஆதாரமாக ஷீலா கொடுத்துள்ளார்.ஷீலா, சவுந்தரராஜனிடம் விசாரித்த பொலிசார், நீதிமன்றத்தில் பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பினர்.