கோத்தாவுக்கு கொரோனா என வதந்தி; ஒருவருக்கு மறியல்!
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/04/92394313_3050462895012753_3158568586415439872_o-16.jpg)
கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை – வாத்துவையில் நேற்று (05) கைது செய்யப்பட்ட குறித்த பெண் (41-வயது) ஒரு நடன கலைஞர் என்பதுடன், அவர் ‚ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது‘ என தகவல் பகிர்ந்தார் என தெரிவந்துள்ளது.
அவர் மீது கணினி குற்றவியல் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.