März 28, 2023

இலங்கையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

இலங்கையில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 126 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 251 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஒருவர் உயிரிழந்திருந்தார்.
குறித்த நபர் தங்கியிருந்த மருதானை பகுதியிலுள்ள ஒரு வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.